அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
கௌரவ பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கமைய, தற்போது நாட்டில் பரவி வரும் கொவிட் - 19 தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குவதற்காகவும் கொவிட் நிதியத்தை வலுப்படுத்துவதற்காகவும் அமைச்சரவை அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை குறித்த நிதியத்திற்கு அன்பளிப்பு செய்வதற்கு அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
Comment