திருகோணமலை நகரப் பகுதியில் சங்கமித்தைக்கு அருகிலுள்ள மான்களுக்கென ஒதுக்கப்பட்ட “மான்கள் சரணாலயத்தில்” நகரசபையின் வேண்டுகோளுக்கு இனங்க திருகோணமலை ரொட்டறிக் கழகத்தால் 5 அடி தொடக்கம் 6 அடி வரை உயரமுள்ள 50 மரக்கன்றுகளும், அதனை பாதுகாப்பதற்கான இரும்பிலான கூடும் செய்து தரப்பட்டதோடு 2019.12.19ம் திகதி காலை 8.30க்கு மணிக்கு மரங்கள் யாவும் நாட்டப்பட்டுள்ளன.
இந்த மரக்கன்றுகளை தொடர்ந்து நீரூற்றி பராமரிக்கும் வேலைகளை நகராட்சிமன்றம் பொறுப்பேற்று மேற்கொள்ளவுள்ளது.
இவ் வைபவத்திட்கு திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் ஆ. உதயராஜன் தலைமை தாங்கினார் நகர சபை முதல்வர் திரு ராசநாயகம், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன், மற்றும் திருகோணமலை ரோட்டரி கழக அங்கத்தவர்களும் பங்கு பற்றி மரங்களை நடடார்கள்
Comment