இந்தோ லங்கா கடற்றொழில் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தமிழ்நாட்டின் புதிய மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன் புதிய கடற்றொழில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். விசேடமாக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

மாநில கடற்றொழில் அமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்குமுகமாக தொலைபேசியில் தொடர்புகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதாகவும் அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

Comment