Wednesday, 15, Oct, 11:47 PM

 


கீழ்க்காணும் சேவைகள் வழங்கலில் ஈடுபடும் எந்தவொரு அரச கூட்டுத்தாபனத்திலிருந்து அல்லது அரச திணைக்களத்திலிருந்து அல்லது உள்ளூராட்சி நிறுவனத்திலிருந்து அல்லது கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து அல்லது அவற்றின் கிளைகளிலிருந்து வழங்கப்படும் சேவைகள் பொது மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது எனக் கருத்தில்கொண்டு, அந்தச் சேவைகளை வழங்குவதற்கு இடையூறு அல்லது தடைகள் ஏற்படக்கூடும் என்ற காரணத்தினாலும், மற்றும் சுகாதார மற்றும் பாதுகாப்புச் சேவைகள் கொவிட் -19 தொற்றுப் பரவல் நிலைமையினால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய இணைந்த சேவைகளை வழங்குவதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள காரணத்தினாலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கொவிட் -19 நோய்த் தடுப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் கவனத்தில் கொண்டு - பின்வரும் அரச சேவைகளை, ஜூன் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, அத்தியாவசிய சேவைகள் என நான் பிரகடனம் செய்துள்ளேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 


* இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய எந்தவொரு தன்மையிலான சேவையின் சகல சேவைகள் , வேலைகள் மற்றும் தொழில் பங்களிப்பு .


* பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் திரவ வாயு உள்ளிட்ட அனைத்து எரிபொருள் வழங்கல் அல்லது பகிர்ந்தளித்தல்.


* சுங்கக் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காகத் துறைமுகம் எனப் பொருள்கோடல் செய்யப்பட்டுள்ள எந்தவொரு துறைமுகத்திலுள்ள கப்பலிலிருந்து எண்ணெய் அல்லது எரிபொருளை வெளியேற்றுதல் , கொண்டுசெல்லல் , தரையிறக்குதல் , களஞ்சியப்படுத்துதல் , ஒப்படைத்தல் அல்லது அகற்றுதல் தொடர்பான நிறைவேற்றப்பட வேண்டிய அல்லது அத்தியாவசியமான அனைத்துச் சேவைகள் , வேலைகள் அல்லது எந்த வகையிலுமான தொழில் பங்களிப்பு.


* பொருட்களைக் கொண்டு செல்வதற்காக இலங்கைப் புகையிரதத் திணைக்களம் மற்றும் வீதிப் போக்குவரத்துக்காக போக்குவரத்துச் சபையின் மூலம் மேற்கொள்ளப்படும் சகல பொதுப் போக்குவரத்துச் சேவைகள்.


* மேற் சொல்லப்பட்ட பொதுச்சேவைகளானது சேவைகளின் தேவைப்பாட்டின் வண்ணம் மேற்கொள்ளுவதற்காகத் தேவைப்படும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.


* சகல மாவட்டச் செயலாளர் அலுவலகங்கள் , பிரதேச செயலகங்கள் , கிராம உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கமத்தொழில் ஆராய்ச்சி உதவியாளர்கள் உள்ளிட்ட மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் துறைசார் மட்டத்திலுள்ள உத்தியோகத்தர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது செயற்படுத்தப்பட வேண்டிய தேவையான எந்தவொரு தன்மையிலான சகல சேவைகள் , வேலைகள் மற்றும் தொழில் பங்களிப்பு.


* இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட சகல அரச வங்கிகள் மற்றும் காப்புறுதிச் சேவை நடவடிக்கைகள் . உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கழிவுப்பொருட்கள் முகாமைத்துவச் சேவை நடவடிக்கைகள்.


* வரையறுக்கப்பட்ட இலங்கை கூ.மொ.வி.நி., கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் , உணவு ஆணையாளர் திணைக்களம் , கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சகல உணவு , குடிபானப் பொருட்கள் உள்ளிட்ட பொது மக்களுக்குத் தேவையான ஏனைய சகல நுகர்வுப் பொருட்களை வழங்குதல் , களஞ்சியப்படுத்துதல் , விநியோகித்தல் மற்றும் ஒழுங்குறுத்துகை நடவடிக்கைகள் தொடர்பாகத் தேவையான அல்லது மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கருதப்படும் சகல சேவைகள் , வேலைகள் அல்லது எந்தவொரு விதத்திலான தொழில் பங்களிப்பை வழங்குதல்.


* மாகாண சபைகளின் கீழுள்ள சகல அரச அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவகையிலான சகல சேவைகள் , வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு.

 

Comment


மேலும் செய்திகள்

  • சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

    சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

    Super User 03 September 2023

    சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...

  • எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

    எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

    Super User 03 September 2023

      எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...

  • ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

    ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

    Super User 28 March 2023

    நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...

  • துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    Super User 08 February 2023

    துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...

  • வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    Super User 08 February 2023

    அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...

  • 75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    Super User 08 February 2023

    75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...

  • இலங்கையின் டொலர் கையிருப்பு  11.7% அதிகரிப்பு

    இலங்கையின் டொலர் கையிருப்பு 11.7% அதிகரிப்பு

    Super User 08 February 2023

    2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...

  • GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    Super User 08 February 2023

    இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...

  • துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    Super User 06 February 2023