இஸ்லாத்தின் தாற்பரியத்தை தியாகத்தின் மூலம் முழு உலகிற்கும் கற்றுத் தரும் தியாகத் திருநாளான புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் (SLBC) எதிர்வரும் புதன்கிழமை (21) பெருநாள் அன்று காலை 10.05 AM இற்கு பன்பலை 102.1 Mhz, 102.3Mhz இல் ஹஜ் பெருநாள் கவியரங்கம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இக்கவியரங்கிற்கு எழுத்தாளரும் கவிஞர் உமான நாச்சியாதீவு பர்வீன் தலைமை தாங்குகிறார். அவரின் தலைமையில் கவிஞர்களான
கல்முனை அறூபா அஹ்லா, கெக்குனுகொல்ல சப்ராஸ் அபூபக்கர், கிண்ணியா நஸார் இஜாஸ், அநுராதபுரம் சீமா சைரீன், புத்தளம் - ஏத்தாலை சவ்துன் நிசா ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை தொடர்ந்தும் இவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுத்து செயற்படுவது பாராட்டுக்குறிய விடயமாகும்.
Comment