MBM பௌண்டேசனின் நிதி உதவியுடன் நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு!
MBM பௌண்டேசனின் நிதி உதவியுடன் ( கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை முன்னாள் விரிவுரையாளரும் பல மனித உரிமை அமைப்புக்களின் நிபுணத்துவ ஆலோசகரும் சட்டக் கலாநிதியுமான பௌமி முஹைதீன் அவர்களின் சொந்த நிதியில்) கிண்ணியா தீர்ப்பாயத்தின் ஏற்பாட்டில் கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமாஜதீவு, பூவரசந்தீவு, புதுக்குடியிருப்பு, மணியரசன் குளம், நடுத்தீவு ஆகிய பிரதேசங்களில் கிண்ணியா தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களால் வாழ்வாதாரம் இழந்த மிக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.