2076 ஆம் ஆண்டு ஒரு முக்கியமானதொரு ஆண்டாக வரப்போகிறது
(மீள்பதிப்பு)
கலாநிதி ஏ.சி.எல். அமீர் அலி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்/காத்தான்குடி 5ஆம் குறிச்சிப் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை மட்/ வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை கொழும்பு ஸாஹிரா கல்லூரியிலும் கற்றுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புக் கலைமானிப் பட்டத்தையும் B.A(Hons) பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் பொருளியல் வரலாற்றுத்துறையில் தத்துவ இளமானி M.Phil (London) பட்டத்தையும் மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் கலாநிதிப் பட்டத்தையும் Ph.D. (W Aust) பூர்த்திசெய்துள்ளார். ஆரம்பத்தில், பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளராகவும், அவுஸ்திரேலிய மெரிடொக் (Murdoch) பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை வருகை தரும் விரிவுரையாளராகவும், 1986 ஆம் ஆண்டு புலனாய் தாருஸ்ஸலாம் பல்கலைக்கழகத்தில் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளராகவும் (8 வருடம்) 1994 ஆம் ஆண்டு மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் (University of West Aus) சிரேஷ்ட விரிவுரையாளராகவும் (12 வருடம்) இணைந்து பணியாற்றியுள்ள இவர், மீண்டும் 2002ஆம் ஆண்டு் மெரிடொக் (Murdoch) பல்கலைக்கழகத்தில் இணைந்து தற்போது முதுநிலை விரைவுரையாளராக பணியாற்றி வருகிறார். சமூக பொருளாதார விவகாரங்களில் மிகுந்த ஈடுபாடுடைய கலாநிதி அமீர் அலி, அவுஸ்திரேலிய ஜோன் ஹவார்ட் அரசாங்கத்தின் ஆலோசகராகவும், அவுஸ்திரேலிய பெடெரேஷன் இஸ்லாமிக் கவுன்ஸிலின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். முஸ்லிம் சமூக விவகாரங்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சுமார் நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வடித்துள்ள இவர், சர்வதேச பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் சமகாலத்தின் முக்கிய விவகாரங்கள் தொடர்பில் கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.
அண்மையில் இலங்கை வந்திருந்த கலாநிதி அமீர் அலி தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டி.