
மாஞ்சோலையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த முஸம்மில் 1967.12.08 இல் மர்ஹூம்களான இல்யாஸ் - சைய்னா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர்.
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம், ஸாஹிராக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கற்றவர். ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதிபராகப் பணியாற்றினார்.
கொரோனா என உறுதிப்படுத்தி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட நிலையில் 2021.05.20 இல் இவர் காலமானார். இவரது ஜனாஸா ஓட்டமாவடி மஜ்மாநகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது ஜனாஸா அடக்க இலக்கம் : 203
இவரது மனைவி சுபைதா. முகம்மது திஸான், முகம்மது முஸ்னி, ரீமா அஸ்மன் ஆகியோர் இவரது பிள்ளைகள்.
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
குறிப்பு:
உங்கள் குடும்பத்தில் அல்லது அயலில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருப்பின் அவர்கள் தொடர்பான பின்வரும் விபரங்களை அவரது போட்டோவுடன் 0772612096 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப் செய்யுங்கள்.
பெயர், பிறந்த திகதி, பிறந்த இடம், தந்தை, தாய் பெயர், கற்ற பாடசாலை, செய்த தொழில், மரணமடைந்த திகதி, மரணமடைந்த இடம் , அடக்கஸ்தல இலக்கம், வாழ்க்கைத்துணை, பிள்ளைகள்
Comment